Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மேல்முறையீடு மனுக்கள் குறித்து ஆட்சியர் ச.உமா கள ஆய்வு

அக்டோபர் 21, 2023 11:36

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம், காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மேல்முறையீடு மனுக்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை கடந்த 15.09.2023 அன்று தொடங்கி வைத்தார். 

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். 

    அதன் அடிப்படையில் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா களஆய்வு மேற்கொண்டு விண்ணப்பம் ஏற்கபடாததற்கான காரணங்கள், மேல்முறையீடு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

தலைப்புச்செய்திகள்